Saturday 14 September 2013

எந்தப் பராமரிப்பும் இல்லாம வருமானம் தர்றது தேனீ வளர்ப்பு மட்டுந்தாங்க!


”விவசாயம், கால்நடை வளர்ப்புனு எதைச் செஞ்சாலும் கவனமா பராமரிச்சாதான் வருமானம் கிடைக்கும். ஆனா, எந்தப் பராமரிப்பும் இல்லாம வருமானம் தர்றது தேனீ வளர்ப்பு மட்டுந்தாங்க. வரு மானத்தோட, விளைச்சலையும் கூட்டுற அற்புதத்தைச் செய்யுது தேனீ. இதனால எனக்கு ரெட்டிப்பு சந்தோஷம்” என்று உற்சாகம் பொங்கச் சொல்கிறார், ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகேயுள்ள கொளத்துப் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர்.
தோட்ட வேலையில் முனைப்பாக இருந்த பாஸ்கரைச் சந்தித்தபோ து. ”தென்னை, வாழையைத் தவிர மத்த வெள்ளாமையைச் செய்றதி ல்லை. நாலு ஏக்கர் தென்னந்தோப்புல தேனீப் பெட்டிகளை வெச்சி ருக்கேன். 10 வருஷத்துக்கு முன்ன சிவகிரியில இரு க்கற தண்டாயு தபாணிதான் தேனீ வளர் க்கப் பயிற்சி கொடுத்தாரு. ஆரம்பத்துல ரெண்டு பெட்டியை வெச்சு, கொஞ்சம், கொஞ்சமா தேன் எடுக்க கத்துகிட்டேன் . இப்ப 15 பெட்டி வரைக்கும் வெச்சிருக் கேன். குறைஞ்சது 10 பெட்டிகளுக்கு மேல வெச்சாதான் நல்ல வருமானம் கிடைக்கும். இதுக்கு முதலீடு னு பாத்தா ரொம்ப ரொம்பக் குறைவுதான். 20 ஆயிரம் தேனீக்களோ ட ஒரு பெட்டி 1,500 ரூபாய்க்குக் கிடைக்குது. பெட்டியை வாங்கிட்டு வந்து தோட்டத்துல வெச்சுட்டாப் போதும். வேற எந்தச்செலவும் இல் லை. தினமும் ஒரு பார்வை பாக்கணும். தினமும் பாக் கலைனாலும் வாரம் ஒரு முறையாவது பெட்டியில எறும்பு, கரை யான் ஏறியிருக் கானு பாத்தாப்போதும். அவ்வளவுதான் பராம ரிப்பு!” என்று எளிய முன்னுரையிலேயே எல்லாவற்றையும் புரிய வைத் தவர்,
ஒரு கல்லில் இரண்டு மாங்காய் !
”எங்க தோப்புல தேனீ வளர்க்க ஆரம்பிச்சதுல இருந்து விவசாயமும் அருமையா இருக்கு. தேனீக்களோட அயல் மகரந்தச் சேர்க்கை கார ணமா வாழை உற்பத்தியும் அதிகரிச்சிருக்கு. தென்னை மரமும் முன் னைக் காட்டிலும் இப்ப நல்லா இருக்கு. ஆரம்பத்துல விளையாட் டா ஆரம்பிச்சது. இப்ப வருமானத் தோட, விளைச்சலையும் அதிகரிச் சுருக்கு. என் மனைவி சங்கீதா, மகள் இலக்கியாகூட தேனீக்க ளை பயப்படாம, பக்குவமா கையா ள பழகிட்டாங்க.
என்னைவிட அவங்கதான் தினமு ம் அதைப் பராமரிக்கறவங்க. சில நேரம் மழை இல்லாம விவசாயம் பொய்ச்சுட்டாலும்… தேனீ வளர்ப்பே அந்த வருஷம் வருமானத்தை சரி பண்ணிடும்’’ என்ற பாஸ்கர், தேனீப் பெட்டிகளை அமைக்கும் முறைகளைப்பற்றி சொல்லத்தொடங்கி னார். அதைப் பாடமாகத் தொகுத்திருக்கி றோம்.
2 அடுக்குகள்… 11 சட்டங்கள் !
‘தேனீ வளர்ப்புப்பெட்டியில் இரண்டு அடுக் குகள் இருக்கும். மேல் அடுக்கில் சதுர வடி விலான 5 சட்டங்கள் இருக்கும். கீழ் அடுக் கில் 6 சட்டங்கள் இருக்கும். மேல் அடுக் கை தேன் சேகரிக்கவும், கீழ் அடுக்கை, குஞ்சுகள் மற்றும் தேனீக்க ளுக்காகவும் ஒதுக்க வேண்டும். கீழ் அடுக்கில்தான் தேனீக்கள் அடை கட்டி வசிக்கும். ஒவ்வொரு சட்டமும் 3செ.மீ. இடை வெளியி ல் இருக்கும். அடைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் இரு ப்பதற்காகத்தான் இந்த இடைவெளி. இந்தச் சட்டம் மேற்புறமாக உருவி எடுக்கும்படியான அமைப்பில் இருக்கும்.
சட்டம் அடங்கிய ஈரடுக்குப் பெட்டியின் அடிப்புறத்தில் ஒரு ‘ஸ்டாண்ட்’ இருக்கும். அந்த ஸ்டாண்டின் அடிப்பகுதியை நிலத்தில் ஊன்றி வைக்க வே ண்டும். பெட்டி, நிலத்திலிருந் து 2 அடி உயரத்தில் இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண் டும். அப்போதுதான் தான் கொ ண்டு வரும் தேனை, எளிதாக தேனீக்கள் கூட்டில் வைக்க முடியும். நாமும் சிரமப்படாம ல் சட்டத்தை எடுத்து பெட்டியைப் பராமரிக்க ஏதுவாகவும் இருக்கு ம். பெட்டியின் அடிப்பாகத்தில் தேனீக்கள் வந்து செல்லும் அள வுக்கு சிறிய துளை இருக்கும். அத்துளையின் முன்தான் காவல்காரத் தேனீ க்கள் இருக்கும். பெட்டியின் மேற்புறத்தில் பாலிதீன் பை யைக் கொண்டு கட்டிவிட வேண்டும். இது பெட்டிக்கு நிழலைத் தருவதோடு, மழை யிலிருந்தும் பாதுகாக்கும். ஒவ்வொரு பெட்டிக்குமான இடைவெளி 5 முதல் 6 அடி இருக்க வேண்டும்.
இது தனி உலகம் !
ராணித் தேனீ, வேலைக்காரத் தேனீ, ஆண் தேனீ என்று மூன்று வகைகள் உள்ள தேனீ குடும்பம், ஒவ்வொரு பெட்டியிலும் இருக்கு ம். ஒவ்வொரு வகை தேனீயும் ஒவ்வொரு வேலையைச் செய்யும். ராணித் தேனீக்கு… இளம் தே னீக்களின் தலைப்பகுதியில் உற்பத்தி ஆகும் ‘ராயல் ஜெல் லியை’ தின்று, முட்டை வைப் பது மட்டும்தான் வேலை. இது வாழ்வில் ஒரே முறைதான் ஆண் தேனீயுடன் உறவு கொள் ளும். இதன்ஆயுள் காலம் 3 ஆண்டுகள். ஒரு குடும்பத்தில் ஒரு ராணித்தேனீ மட்டும்தான் இருக்கும். அடை கட்டுவது, இளம் தேனீக்களைப் பராமரிப்பது, மகரந்தம் இருக்கும் திசையைக் காட்டு வது, தேன் சேகரிப்பது போன்ற வேலைகளை வேலைக்காரத் தேனீ க்கள் செய்யும். இவற்றின் ஆயு ள் காலம் நான்கு முதல் ஆறு மாதங்கள். இவற்றின் எண்ணி க்கை ஆயிரக்கணக்கில் இருக் கும். இனப் பெருக்கத்துக்கு மட் டும் பயன்படும் ஆண் தேனீக்க ளின் ஆயுட் காலம் 2 முதல் 4 மாதங்கள். ஒவ்வொரு பெட்டி யிலும் பத்துக்கும் மேற்பட்ட ஆண் தேனீக்கள் இருக்கும்.
பட்டத்து ராணி !
ராணித் தேனீ, 14-15 நாட்களிலும்; வேலைக்காரத் தேனீ, 21 நாட்களி லும்; ஆண் தேனீ, 24 நாட்களிலும் முட்டையில் இருந்து வெளியில் வரும். வெளிவந்ததுமே ராணித் தேனீ பறக்க ஆரம்பித்துவிடும். ஒரு பெட்டியில் உள்ள ராணித் தேனீக்கு வயதாகிவிட்டால், கூட்டில் உள் ள ஒரு தேனீயைத் தேர்ந்தெடுத்து, அடுத்த ராணித் தேனீயாக பதவி யில் அமர வைக்கும் வகையில் ராயல் ஜெல்லிகளைக் கொடுத்து வே லைக்கார தேனீக்கள் வளர்க்க ஆரம்பிக்கும். வயதான ராணித் தேனீ இறந்துவிட்டால், இளம் ராணித் தேனீ பதவிக்கு வரும்.
எதிரிகள் உஷார் !
தேனீ வளர்ப்பில் முக்கியமான விஷயம்… தேன் அடையில ராணித் தேனீ இருப்பதைக் கண்காணிப்பதுதான். அடிக்கடி அதைப் பரிசோதி க்க வேண்டும். அடையில் உள்ள அறைகளில் பெரிய அறைதான் ராணித் தேனீயின் அறை. அங்கே அது இல்லைஎன்றால் வேறு பெட் டியில இருந்து ஒரு ராணித் தேனீயைப் பிடித்து வைக்க வேண்டும். பல்லி, ஓணான், கதண்டு, சிலந்தி ஆகியவை தேனீக்களின் முக்கிய எதிரிகள். இவை பெட்டிக்குள் போகாமல் பார்த்துக் கொள்ள வேண் டும். அடை உள்ள சட்டத்தை ஒரு குழந்தையைத் தூக்குவது போல பக்குவமாக பொறுமையாகத் தூக்கினால்… தேனீக்கள் நம்மைக் கொட்டாது.
தொழில்நுட்பங்களைப் பக்குவமாக விவரித்த பாஸ்கர் நிறைவாக, ”ஒரு தேனீப் பெட்டியிலி ருந்து வருஷத்துக்கு 10 கிலோ தேன் கிடைக் கும். என்கிட்ட இருக்குற 15 பெட்டிகள்ல இருந் து 150 கிலோ அளவுக்கு தேன் கிடைக்குது. ஒரு கிலோ 300 ரூபாய்னு விற்பனை பண்றேன். ஆக, பெருசா எந்த செலவும் இல்லாம… நாலு ஏக்கர் தென்னைக்கு நடுவுல தேனீ வளர்க்கற தால வருஷத்துக்கு 45 ஆயிரம் ரூபாய் கிடைக் குது. தென்னையில கிடைக்கற வருமானம் தனி! வேற என்ன வேணும் நமக்கு!” என்று உற்சாகமாகக் கேட்டு விடைகொடுத்தார்.
பாஸ்கர் சொல்லும் ‘வருமானக் கணக்கு’க்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த ரகுராமன். ”நான் 5 ஏக்கர்ல விவசாயம் செய்றேன். ஏழு வருஷமா தேனீ வளர்ப்பையும் செஞ்சுட் டு வர்றேன். மொத்தமா 5 ஏக்கர்ல விவசாயம் செஞ்சு கிடைக்கற லாபத்தைவிட, தேனீ வளர்ப்புலதான் அதிக லாபம் கிடைக்குது” என் கிறார், உறுதியான குரலில்!   
தொடர்புக்கு,
பாஸ்கர், செல்போன்: 99425-81333
தண்டாயுதபாணி, செல்போன்: 94433-41679
பரமானந்தம், செல்போன்: 94888-50363.
பூச்சியியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்.
தொலைபேசி: 0422-6611214,414.

மகசூலைக் கூட்டும் மகரந்தச் சேர்க்கை !

தேனீ வளர்ப்பு தொடர்பாக விவசாயிகளுக்குப் பயிற்சி கொடுத்து வருபவர் ஈரோடு மாவட்டம், சிவகிரி பகுதியைச் சேர்ந்த தண்டாயு தபாணி. ”10 வயசுல இருந்தே தேனீக்கள் மேல எனக்கு ஆர்வம். பொ ழுதுபோக்கா தெரிஞ்சுக்கிட்ட விஷயந்தான் இப்ப எனக்கு சோறு போடுது. தேனீ வளர்ப்புல நான் கத்துக்கிட்ட விஷயங்கள மத்தவங்க ளுக்கும் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சேன். இதுவரை ஆயிரத்துக் கும் அதிகமான விவசாயிகளுக்குப் பயிற்சி கொடுத்திருக்கேன். பயிர்களுக்கு இடையில ஊடுபயிர் சாகுபடி செய்ற மாதிரி தேனீ வளர்ப்பையும் செஞ்சா… மகசூலையும் கூட்டி, தனி வருமானத்தை யும் கொடுக்கிற வள்ளல்கள்தான், தேனீக்கள்.
உதாரணமா, சூரியகாந்திச் செடியில மகரந்தச் சேர்க்கை க்காக ஒவ் வொரு பூவையும் காகிதம் அல்லது துணியை வெச்சு உரசி விட்டு, மகரந்தத் தைக் காத்துல பரவ விடுவாங் க. ஆனா, அந்தத் தோட்டத்துல தேனீக்களை வளத்தா இந்த வேலையை நாம செய்ய வே ண்டியதில்லை. அதை தேனீக் கள் செஞ்சுடும். இதனால, உட ல் உழைப்பும் நேரமும் நமக்கு மிச்சம். மகசூல் அதிகரிக்கிற தோட தேன் மூலமா கூடுதல் வருமானமும் கிடைக்கும். ஆரம்பத்து லயே அதிகளவுல முதலீடு செய்யாம… 10 பெட்டிகளை மட்டும் வாங் கி, ஆரம்பிக்கணும். கொஞ்சம் தொழில்நுட்பங்களை அனுபவ ரீதியா தெரிஞ்சுக்கிட்டா… இந்த பெட்டிகள்ல இருந்து நாமளே அடுத்தடுத்த ப் பெட்டிகளை உருவாக்கிக்க முடியும். விவசாயிகள் மட்டும்தானு இல்லை. நகரத்துல இருக்கறவங்ககூட தேனீக்களை வளர்த்து வரு மானம் பாக்கலாம்’ என்று நம்பிக்கையூட்டுகிறார், தண்டாயுதபாணி.

அடுக்குத் தேனீக்கள் !

அடுக்குத் தேனீக்களை வளர்க்கும் முறைகளைப் பற்றி, திருவண் ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையைச் சேர்ந்த தேனீ வளர்ப்புப் பயிற்சியாளர் பரமானந்தம் சொன்ன தகவல்கள்…
”அடுக்குத் தேனீக்கள் அடங்கியப் பெட்டிகள், பலரிடமும் விலை க்குக் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம். அல்ல து பெட்டியைத் தயார் செய்துகொண்டு… கரையான் புற்று, மரப்பொ ந்து, பாறை இடுக்குகள் ஆகிய இடங்களில் இருக்கும் அடுக்குத் தேனீ க்களை எடுத்து, பெட்டியில் வைத்தும் வளர்க்கலாம். நாம் சேகரித்து வரும் தேன் அடையை, தேன் பெட்டியிலிருக்கும் சட்டத் தில் வாழைநார் கொண்டு முதலில் கட்ட வேண்டும். பிறகு, வெள் ளை நிற துணியைப் பயன்படுத்தி, ராணித் தேனீ உள்ள தேனீக் கூட்டத்தைச் சேகரித்து வந்து, பெட்டியில் வைக்க வேண்டும் (வேறு நிற துணிகளைப் பயன்படுத்தினால், தேனீக்கள் ஓடிவிடும்). ராணித் தேனீயைப் பெட்டிக்குள் வைத்துவிட்டால், வேலைக்காரத் தேனீக்க ள் வந்து சேர்ந்துவிடும். ராணித் தேனீயைப் பெட்டியின் கீழ்ப்பகுதி யில் இருக்கும் குஞ்சுகளின் அறையில் வைத்து விடலாம்.
தேன் அடை வைக்கப்பட்ட 10 முதல் 15 நாட்களில் சட்டங்க ளில் மெழுகு பிடித்து வளர்ந் து விடும். குஞ்சுகளின் அறை நிரம்பிய பிறகு, முட்டைகள் குறைவாக இருக்கும் ஒரு அடையை எடுத்து, இரண்டாக வெட்டி, தேன் அறையில் உள் ள இரண்டு சட்டங்களில் கட்டி வைக்க வேண்டும். இதன் மூலம் மற்ற சட்டங்களிலும் தேனீக்கள் அடையை உருவாக்கிவிடும். பூக்களின் சீசனைப் பொரு த்து… 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை, ஒவ்வொரு பெட்டியில் இருந்தும் அரை கிலோ முதல் 3 கிலோ வரை தேன் எடுக்க முடியும்.
ஏக்கருக்கு 75 தேனீப் பெட்டிகள் !
பொதுவாக, இந்தியத் தேனீ க்கள் சுமார் 3 முதல் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குச் சென்று தேன் சேகரிக்கும் குணமு டையவை. இவற்றை 10 அடி க்கு ஒரு பெட்டி வீதம் வைத் து வளர்க்கலாம். தென்னை, பாக்கு மரத்தோப்புகளாக இருந்தால், ஏக்கருக்குக் குறைந்தபட்சம் 5 பெட்டி முதல் 75 பெட் டிகள் வரை வைக்கலாம். இதன் மூலம் மகரந்தச் சேர்க்கை அதிகரி க்கும். தேனீப் பெட்டிகளை நிழல் பகுதியில் வைப்பது நல்லது. தென் னை மற்றும் பாக்கு மட்டைகளை பெட்டிமீது வைக்க வேண்டும். இத ன் மூலம் மழை மற்றும் வெயிலிலிருந்து பாதுகாப்பு கிடைப்பதோ டு, தேனீக்களுக்குக் குளிர்ச்சியாகவும் இருக்கும்.
மாதம் 2 அறுவடை !
தேன் சேகரிப்பதற்கு பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட, கையால் இயக்கும் புகைபோக்கியில் காய்ந்த தென்னை நாரினைத் தீயிட்டுக் கொளுத்தி, புகையை தேன் அடை மீது ஊதி விட்டால்… தேனீக்கள் விலகி விடும். பிறகு, தேனைப் பிழிந்தெடுக்க பிரத்யேகமாக தயாரி க்கப்பட்ட டிரம்மில் அடையை வைத்து, கைப்பிடியைச் சுற்றினால், தேன் வடிந்து டிரம்மில் சேகரமாகும்.
மூன்று ஆண்டுகளுக்குக் கெடாது !
அடையில் இருந்து சேகரித்த தேனை சூடுபடுத்தா விட்டால், இரண்டு மூன்று மாதங்களில் புளித்து விடும். அதனால், வாய் அகன்ற பாத்தி ரத்தில் தண்ணீரை வைத்து சூடாக்கி, அதனுள் சிறிய பாத்திரத்தில் தேனை ஊற்றி சூடாக்க வேண்டும். கொதிக்க வைத்த தேனில், மேல் பகுதியில் இருக்கும் நுரையை எடுத்துவிட்டு, சுத்தமான துணியில் வடிகட்டினால், இறந்துபோன தேனீக்கள், மெழுகு, பூ, இலை என தே வையில்லாதக் கழிவுகள் தங்கிவிடும். பிறகு, தேனை ஆறவைத்து… கண்ணாடி பாட்டில் அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றலாம். இது 3 ஆண்டுகளுக்குக் கெட்டுப்போகாது. எக்காரணம் கொண்டும் குளிர்சாதனப்பெட்டியில் தேனை வைக்ககூடாது” என்றார், பரமா னந்தம்.

 மாதந்தோறும் பயிற்சி வகுப்புகள் !

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு மாதமும் தேனீ வளர்ப் புப் பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. இதைப் பற்றி பேசிய, பூச்சியியல் துறை பேராசிரியர் உமாபதி, ”தமிழ் நாட்டில் நிலவக்கூடிய தட்பவெட்ப நிலையில் பல்வேறு விதமா ன பூக்கள் பூக்கின்றன. அவற்றில் உற்பத்தியாகும் தே னைச் சேகரிக்க… இந்தியத் தேனீ மற்றும் இத்தாலியத் தேனீ வளர்ப்பு ஆகியவை பற்றி பயிற்சிகள் கொடுக்கிறோம். மாதம் தோறும், 6-ம் தேதி இந்தப் பயிற்சி நடக்கும். அன்றைய தினம் அரசு விடுமுறை நாளாக இருந்தால், அதற்கு அடுத்த வேலை நாளி ல் பயிற்சி வகுப்பு நடத்தப்படும். இதற்கான கட்டணம் 150 ரூபாய்.
எழுதப்படிக்க தெரிந்தவர்களுக்கு, தொலைதூரக்கல்வி மூலம் தேனீ வளர்ப்பு’ பற்றி 6 மாத காலச் சான்றிதழ் வகுப்புகளும் நடத்தப்ப டுகிறது. இதற்கு கட்டணம் 1,500 ரூபாய். விவசாயிகள் திருப்தி அ டையும் அளவுக்கு, தேனீ வளர்ப்பு முறைகள், பராமரிப்பு முறைகள், தேன் எடுக்கும் முறை… என்று அனைத்தையும் கற்றுக்கொடுக்கி றோம்”

No comments:

Post a Comment