Wednesday 2 April 2014

பூரிக்க வைக்கும் பூத் ஜலக்கியா பத்து சென்ட் நிலத்தில் ரூ.26 ஆயிரம் லாபம்





பூத் ஜலக்கியா, உலகத்திலேயே அதிக காரம் உள்ள மிளகாய். இந்த ரக மிளகாய் பற்றியும்,  வட மாநிலங்களில், இதை விவசாயிகள் சாகுபடி செய்து வருவது பற்றியும் பசுமை விகடனில் சாகுபடி செய்வது பற்றி கட்டுரை வெளியிடப்பட்டது. இப்பொழுது, இதே மிளகாயை, விளைய வைத்து வியக்கக் காத்திருக்கிறார். விழுப்புரம் மாவட்டம், கல்வராயன் மலையில் இருக்கும் வஞ்சிக்குழி கிராமத்தைச் சேர்ந்த சேகர். இவர் சோதனை முயற்சியாக  நடவு செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார். வளைந்து, நெளிந்து செல்லும் மலைப் பாதைகளுக்கிடையில் ‘பூ’ விட்டு நிற்கும் பருத்திச்செடிகளும் கதிர் முற்றிய சோளக் கொல்லைகளும் சூழ்ந்திருக்க சேகரின் தோட்டத்தில், சுமார் 10 சென்ட் நிலத்தில் ‘சிவப்பு’ நிறத்தில் சிர்த்துக் தொங்கிக் கொண்டிருந்தன, ‘பூத் ஜலக்கியா’ மிளகாய்கள்.

இவருக்கு ஒன்றரை ஏக்கர் நிலம் இருக்கிறது. ஆரம்பத்தில் மானாவாரி பட்டத்தில் வரகு, கம்பு, சோளம், கொள்ளு என்று விவசாயம் பார்த்திருக்கிறார். போதுமான வருமானம் வரவில்லை. அதனால், கடன் வாங்கி, கிணறு வெட்டி மக்காச்சோளம், பருத்தி, நெல்  என்று விவசாயம் பார்க்க ஆரம்பித்ததாக கூறுகிறார். இப்பொழுது இவர் கிணற்றில் 22 அடியில் தண்ணீர் இருக்கிறது. அதனால், இந்த போகத்தில் ஒரு ஏக்கரில் மக்காச்சோளம், 40 சென்ட் நிலத்தில் பருத்தி, 10 சென்ட் நிலத்தில் ‘பூத் ஜலக்கியா’ மிளகாயும் சாகுபடி செய்து கொண்டிருக்கிறார். இந்த மிளகாய் விதையை  இவரிடம் ஏழுமலை என்பவர் கொடுத்து சோதனை முயற்சியாக சாகுபடி செய்யச் சொன்னார். கூடவே, எந்த விதமான இரசாயன மருந்துகளும் போடக் கூடாது என்று, இயற்கை உரம், மூலிகை பூச்சி விரட்டி என்று அவரே கொடுத்துள்ளார். அதைஎல்லாம் பயன்படுத்திதான் சாகுபடி செய்திருக்கிறார். செடி நன்றாகவே வளர்ந்திருக்கிறது. இது இதுவரைக்கும் நான்கு அறுவடை மூலம் 100 கிலோ மிளகாய் கிடைத்திருக்கிறது. மீதி அறுவடை பாக்கி இருக்கிறது என்றவர், சாகுபடி பாடத்தை ஆரம்பித்தார். ஆடிப்பட்டம், தை பட்டம் ஏற்றவை
இதன் ஆயுள் காலம் இரண்டு ஆண்டுகள். நம்முடைய மண் மற்றும் தட்பவெப்ப நிலை நிலையில் குறை்நதபட்சம் ஓர் ஆண்டுக்கு செடியை வைத்துக் கொள்ளலாம். தண்ணீர் தேங்காத செம்மண் மற்றும் இருமண் பாங்கான நிலங்கள் ஏற்றவை. ஆடிப்பட்டம் மற்றும் தைப் பட்டம் ஏற்றவை.

நாற்று உற்பத்தி
பசுமைக் குடில் மூலம்தான் பூத் ஜலக்கியா நாற்றுகளை உற்பத்தி செய்ய வேண்டும். ஈரப்படுத்தப்பட்ட தேங்காய் நார்க்கழிவை குழித்தட்டில் நிரப்பி, அதில் விதைகளை நடவு செய்ய வேண்டும். பின்னர், பாலிதீன் கவர் கொண்டு மூடி 7 நாட்கள் வைத்தால் முளைத்து விடும். 20-ம் நாளில் பயிர் வளர்ச்சி ஊக்கியும், 30-ம் நாளில் நோய் தொற்றைக் குறைக்க, இயற்கைப் பூஞ்சானக் கொல்லியும் தெளித்து வந்தால், 40-ம் நாளில் நாற்று நடவுக்குத் தயாராகிவிடும்.

10 சென்ட் நிலத்தில் 300 நாற்று
நிலத்தில் களை இல்லாமல், பொல பொலப்பாக மண் மாறும் அளவுக்கு குறுக்கு நெடுக்காக டிராக்டர் மூலம் இரண்டு உழவு செய்து, 10 சென்ட் நிலத்திற்கு 10 கூடை தொழுவுரம் என்ற கணக்கில் இட்டு, மீண்டும் இரண்டு சால் உழவு செய்ய வேண்டும். பி்ன்னர் இரண்டு அடி அகலத்தில், பார் அணைக்க வேண்டும். பார்களுக்கு இடையில், தண்ணீர் கட்ட ஓர் அடி இடைவெளி விட வேண்டும். நிலத்தை ஈரமாக மாற்றி பாரின் ஒரு பக்கத்தில் மட்டும் 40 நாட்கள் வயதுள்ள மிளகாய் செடிகளை இரண்டு அடிக்கு ஒன்று வீதம் நடவு செய்ய வேண்டும். இப்படி நடவு செய்தால், 10 சென்டி நிலத்தில் சுமார் 300 செடிகள் வரை நடவு செய்யலாம்.
பூச்சிகளுக்கு மூலிகைப் பூச்சிவிரட்டி
மூன்றாவது நாள் உயிர் தண்ணீர் கொடுக்க வேண்டும். தொடர்ந்து, மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சினால் போதும். மாதம் ஒரு முறை களை எடுக்க வேண்டும். 20-ம் நாளில் இலைச் சுருட்டுப் புழு தாக்குதல் இருக்கும். அவற்றைக் கட்டுப்படுத்த, டேங்குக்கு (10 லிட்டர்) 100 மில்லி வேப்பண்ணெய் 50 மில்லி காதி சோப் கரைசல் இரண்டையும் கலந்து தெளிக்க வேண்டும். 25 மற்றும் 50-ம் நாட்களில் ஏதாவது ஒரு பயிர் ஊக்கியைத் தெளிக்க வேண்டும்.
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இயற்கை உரம்-2 கிலோ, வேப்பம் பிண்ணாக்கு -10 கிலோ, எரு -20 கிலோ ஆகியவற்றைக் கலந்து செடிக்குச் செடி வைத்து, மண் அணைக்க வேண்டும். பூச்சித் தாக்குதல் இருந்தால், டேங்குக்கு 300 மில்லி வீதம் மூலிகைப் பூச்சிவிரட்டியைக் கலந்து தெளிக்க வேண்டும்.
30 அயிரம் ரூபாய்
60-ம் நாளில் பூவெடுத்து, 75-ம் நாள் முதல் அறுவடைக்கு வந்து விடும். ஒவ்வொரு செடியிலும் 100 முதல் 120 மிளகாய்கள் இருக்கும். வாரம் ஒரு பறிப்பு வீதம், சராசரியாக, 36 முறை பறிக்கலாம். ஒரு பறிப்புக்கு 20 கிலோ வீதம், 36 பறிப்புக்கும் சேர்த்து 720 கிலோ மிளகாய் கிடைக்கும். அவற்றில் செலவு போக, 26 அயிரம் ரூபாய் லாபமாகக் கிடைக்கும்.

கிலோ 50 ரூபாய்
சேகரின் சாகுபடி பாடத்தை அடுதது, அவருக்கு பூத் ஜலக்கியா மிளகாயை சோதனை முயற்சியாக கொடுத்த விழுப்புரம் மாவட்டம், இளையனார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலையிடம் பேசினோம். இவர் நம்மிடம் 10 வருடமாக விவசாயிகளிடம் இருந்து மூலிகைகளை வாங்கி விற்பதாக கூறினார். ஒரு முறை பசுமை விகடனில் பூத் ஜலக்கியா மிளகாய் பற்றிய செய்தியைப் படித்து அதற்குப் பிறகு அசாம் மாநிலத்தில் உள்ள விதைக் கம்பெனியைத் தொடப்பு கொண்டு விதையை வாங்கி, தன்னுடைய தோட்டத்தில் நாற்றங்கால் போட்டுள்ளார். அதிலிருந்து50 செடிகளைப் பறித்தெடுத்து நடவு போட்டுப் பார்த்துள்ளார். நல்லாவே வந்ததாக கூறுகிறார்.


அதற்குப் பிறகு, போன தைப்  பட்டத்தில் மலைக் கிராமங்களில் எப்படி வளர்கிறது என்று பார்ப்பதற்காக சேகரிடம் கொடுத்து அங்கேயும் நன்றாகவே வந்திருக்கிறது என்கிறார். சமவெளி சாகுபடிக்கு ஆடிப்பட்டமும், மலைப் பகுதிக்கு தைப் பட்டமும் நன்றாக இருக்கிறது. இப்போதைக்கு, ஒரு கிலோ மிளகாயை 50 ரூபாய் என்றுஇவரே வாங்கி வைத்திருப்பதாக கூறுகிறார். இந்த மிளகாய்க்கான ஏற்றுமதி வாய்ப்பு சிறப்பாகவே உள்ளதாகவும் கூறுகிறார். பச்சை மிளகாய் தரத்திற்கு தக்கப்படி கிலோ 20 ரூபாயிலிந்து 200 ரூபாய் வரைக்கும் விற்பனையாகிறது. காய்ந்த மிளகாய் தரத்தைப் பொறுத்து கிலோ 200 ரூபாயிலிருந்து 1இ200 ரூபாய் வரைக்கும் விற்பனையாகிறது. வழக்கமாக மிளகாய் விதை சேமிப்பது போல, நன்றாக காயவைத்து விதையை சேகரித்து பயன்படுத்தலாம் என்கிறார்.
தொடர்புக்கு
சேகர்
செல்போன் : 96261 – 17026

No comments:

Post a Comment